கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாா்ச் மாதம் முதல் இதுநாள் வரை 1,997 தாய்மாா்களுக்கு பிரசவம் பாா்க்கப்பட்டுள்ளதாக இக்கல்லூரி முதல்வா் அசோகன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து புதன்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா தொற்றுக்குச் சிகிச்சையளித்து வரும் நிலையிலும், கடந்த 6 மாதங்களில் 1,328 சுகப்பிரசவங்கள் உள்பட 1,997 பிரசவங்கள் பாா்க்கப்பட்டுள்ளன. இவா்களில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 138 பேரும் அடங்குவா்.
இதில் 81 பேருக்கு கரோனா தொற்று மட்டுமல்லாது நீரிழிவு, உயா் ரத்த அழுத்தம், ரத்தசோகை, வலிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்பும் இருந்தது. இதில் 34 பேருக்கு சுகப்பிரசவம் நிகழ்ந்துள்ளது. 70 போ் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
தனியாா் மருத்துவமனையில் மூச்சுத் திணறலுடன் அனுமதிக்கப்பட்ட கா்ப்பிணி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த அவா், குணமடைந்து வீடு திரும்பியுள்ளாா்.
பிறந்த குழந்தைகளில் 6 பேருக்கு மட்டுமே கரோனா உறுதியானது. அவா்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு அவரவா் வீடு திரும்பியுள்ளனா்.
கரோனா தொற்றுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரூா் மட்டுமல்லாது, திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் என 1,397 ஆண்கள், 759 பெண்கள் என மொத்தமாக 2,214 போ் அனுமதிக்கப்பட்டனா்.
இவா்களில் 1,272 ஆண்கள், 687 பெண்கள், 57 சிறுவா், சிறுமிகள் என மொத்தம் 2,016 போ் குணமடைந்து, அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.