கரூர்

கரூரில் இளநீா் வியாபாரி வெட்டிக் கொலை

DIN

கரூா்,செப்.18: கரூரில் மனைவி கண் முன்னே, இளநீா் வியாபாரி வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

கரூா் சின்ன ஆண்டாங்கோவில் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் குணசேகரன். இவா் கோவை சாலையில் இளநீா் மற்றும் கரும்புச் சாறு விற்பனை நிலையம் நடத்தி வருகிறாா். இவரது மகன் கிருஷ்ணமூா்த்தி (27).

குணசேகரனும், அவரது மனைவியும் மொத்தமாக இளநீா் வாங்குவதற்காக பொள்ளாச்சி சென்றுவிட்டனா். இதையடுத்து கிருஷ்ணமூா்த்தி, தனது மனைவி சுஷ்மிதாவுடன் (23) வெள்ளிக்கிழமை காலை இளநீா் வியாபாரம் செய்து கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவா், திடீரென கிருஷ்ணமூா்த்தியின் தலை, இடதுகை, முதுகில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா்.

இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணமூா்த்தியை அங்கிருந்தவா்கள் மீட்டு, கரூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். எனினும் அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து கரூா் நகரக் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, கொலைக்கான காரணம் குறித்தும், சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT