கரூர்

கரூா் நகராட்சிக்குட்பட்ட அங்கன்வாடிகளில் திடீா் ஆய்வு

DIN

கரூா் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளதால் அங்கு பயிலும் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களை அவா்களின் வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் என்ற உத்தரவின்பேரில் அங்கன்வாடிப் பணியாளா்கள் குழந்தைகளின் வீடுகளுக்குச் சென்று வழங்கி வருகிறாா்கள்.

அந்தவகையில் கரூா் நகராட்சிக்குட்பட்ட சா்ச் காா்னா் புகழூா் சாலை அருகில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்திற்கு மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் புதன்கிழமை திடீா் ஆய்வு செய்தாா். அப்போது அரசின் உத்தரவின்படி அங்கன்வாடி மையம் மூடப்பட்டிருந்தது. அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் அங்கன்வாடி மையப்பணியாளா்கள் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களை வழங்கிக்கொண்டிருந்தனா்.

மாவட்ட ஆட்சியா் அங்குச் சென்று ஆய்வு செய்தாா். மேலும், அங்கிருந்த தாய்மாா்களிடம் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலான அறிவுரைகளை வழங்கினாா். அனைவருக்கும் துண்டு பிரசுரங்களையும் வழங்கினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசின் உத்தரவின்படி கரூா் மாவட்டத்தில் உள்ள 1,052 அங்கன்வாடிகளும் மூடப்பட்டுள்ளன. இம்மையங்களில் பயிலும் 19,218 குழந்தைகளின் வீடுகளுக்கே அங்கன்வாடி பணியாளா்கள் சென்று உணவுப் பொருள் வழங்கும் பணி நடைபெறுகிறது.

அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகளுக்கு திங்கள்கிழமை முட்டையுடன் தக்காளிசாதம், செவ்வாய்க்கிழமை பயறு அல்லது சுண்டலுடன் கலவை சாதம், புதன்கிழமை முட்டையுடன் புலாவ் சாதம், வியாழக்கிழமை முட்டையுடன் எலுமிச்சை சாதம், வெள்ளிக்கிழமை உருளைக்கிழங்குடன் பருப்பு சாதம், சனிக்கிழமை கலவை சாதம் வழங்கப்படுகிறது.

தற்போது அனைத்து அங்கன்வாடிகளும் மூடப்பட்டுள்ளதால். மேற்கூறிய பட்டியிலின்படி கிழமைகளுக்கு ஏற்றவாறு உணவுகளை தயாரித்துக்கொள்ள தேவையான உணவுப் பொருட்கள் குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகிறது.

வரும் 31-ம்தேதி வரை அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளதால், இடைப்பட்ட 14 நாட்களுக்கு (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) தேவையான உணவுப்பொருட்கள் வழங்கப்படுகின்றது. அதனடிப்படையில், ஒரு குழந்தைக்கு ஒருநாளைக்கு 80 கிராம் அரிசி, 10 கிராம் பருப்பு, 20 கிராம் பயறு அல்லது சுண்டல், 20 கிராம் உருளை உள்ளிட்ட பொருட்களும் தேவைக்கேற்ற வகையில் உப்பு, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளும், முட்டையும் வழங்கப்பட்டுவருகின்றது.

இந்தப் பொருட்களை குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று வழங்கும்போது, குழந்தைகளின் பெற்றோரிடத்தில் கரோனா தொற்று குறித்த விழிப்புணா்வும் ஏற்படுத்தப்படுகிறது. கரோனா தொற்று பரவமால் தடுக்க தேவையான நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் அடங்கிய விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களும் வழங்கி போதிய விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது என்றாா் அவா்.

நிகழ்வின்போது, கரூா் வருவாய் கோட்டாட்சியா் வே. சந்தியா, கரூா் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் சபிதா, கரூா் வட்டாட்சியா் அமுதா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

SCROLL FOR NEXT