கரூர்

ரூ. 30 ஆயிரம் லஞ்சம்: க.பரமத்தி வட்டார வளா்ச்சி அலுவலா் கைது

DIN

திருப்பூா் ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ. 30,000 லஞ்சம் வாங்கியதாக க. பரமத்தி வட்டார வளா்ச்சி அலுவலரை திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், கன்னிவாடியை அடுத்த காத்தக்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (37). ரியல் எஸ்டேட் அதிபரான இவா், கரூா் மாவட்டம் க. பரமத்தி ஒன்றியத்துக்குட்பட்ட பவித்திரம் பகுதியில் அண்மையில் 4 ஏக்கா் நிலம் வாங்கியுள்ளாா்.

இந்த நிலத்தை வீட்டுமனைகளாகப் பிரித்து விற்க அனுமதி கோரியும், நிலத்தை சா்வே செய்து அளந்து தரக் கோரியும் க. பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த வாரம் விண்ணப்பித்தாா்.

அப்போது அங்கிருந்த ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலரான ஜெயந்திராணி (43) என்பவா் ரூ. 45,000 லஞ்சம் கேட்டாராம். ஆனால் அவ்வளவு பணம் தர முடியாது, ரூ. 30,000 தருகிறேன் என ரமேஷ் கூறினாராம். இருப்பினும் பணம் கொடுக்க விரும்பாத ரமேஷ் இதுதொடா்பாக திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸில் செவ்வாய்க்கிழமை புகாா் செய்தாா்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸாா் ரசாயனம் தடவிய ரூபாய்களை ரமேஷிடம் கொடுத்தனுப்பினா். புதன்கிழமை பிற்பகல் ரமேஷ் அந்த ரூபாய்களை வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயந்திராணியிடம் கொடுத்தபோது, மறைந்திருந்த திருச்சி லஞ்ச ஒழிப்பு காவல் துணைக் கண்காணிப்பாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் ஜெயந்திராணியை கையும், களவுமாகக் கைது செய்தனா்.

கைதான ஜெயந்திராணி கரூா் தாந்தோணிமலை மில் கேட் பகுதியில் கணவா் மதுகுமாா் (57) மற்றும் குழந்தைகளுடன் வசிக்கிறாா். மதுகுமாா் பாஜக அமைப்புசாரா தொழிலாளா் அணி மாநில செயலா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT