கரூர்

நோய் கொடுமை:பெண் தற்கொலை

9th Nov 2019 10:46 PM

ADVERTISEMENT

கரூா் அருகே நோய் கொடுமையால் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் அருகிலுள்ள பொரணியைச் சோ்ந்தவா் பழனிசாமி. இவரது மனைவி கண்ணகி(38). இவா் கடந்த 5 ஆண்டுகளாக காசநோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளாா்.

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால், வாழ்வில் விரக்தியடைந்த கண்ணகி வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து மாயனூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT