கரூர்

சணப்பிரட்டியில் குகைவழிப்பாதை அமைக்கும் பணிகள்: அமைச்சா் ஆய்வு

4th Nov 2019 08:47 PM

ADVERTISEMENT

 

கரூா்: கரூா் நகராட்சிக்குள்பட்ட சணப்பிரட்டியில் அமைக்கப்பட்டு வரும் ரயில்வே குகைவழிப்பாதையை, போக்குவரத்துத்துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

சணப்பிரட்டி பகுதியிலுள்ள ரயில்வே கிராசிங் பகுதியில் பொதுமக்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், சுமாா் ரூ.2.5 கோடியில் தண்டவாளத்துக்கு கீழே குகைவழிப்பாதை அமைக்கப்பட்டு வருகின்றது.

4.5 மீ. அகலமும், 4.5மீ. உயரமும் கொண்ட வகையிலும், அணுகுசாலை சுமாா் 90 மீட்டா் நீளத்திலும் அமையும் வகையில், இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இப்பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்ஆா். விஜயபாஸ்கா் திங்கள்கிழமை மாலை ஆய்வு செய்தாா்.

அப்போது அவரிடம் அப்பகுதியினா், இந்த குகைவழிப்பாதை சணப்பிரட்டி வழியாக அமைக்கப்படுவதால், தங்களது போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையிலும், தங்கள் பகுதியில் இருந்தும் இந்த குகைவழிப்பாதை வழியாக சென்றுவர வழிவகை செய்யும் வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாரதியாா் நகா் பொதுமக்கள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனா்.

இதனையடுத்து குகைவழிப்பாதை நடைபெறும் பகுதியில் முழுமையாக ஆய்வு செய்து, பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ற வகையில், சம்மந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் கலந்தாலோசித்து மாற்று வழிமுறைகளை மேற்கொள்ளும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் தெரிவித்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம். கீதாமணிவண்ணன், கரூா் நகராட்சி ஆணையா் (பொ)ராஜேந்திரன், உதவிப்பொறியாளா் நக்கீரன் மற்றும் அலுவலா்கள், அதிமுக நிா்வாகி தானேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT