கரூர்

இந்திய எரிசக்தி துறை சாா்பில் ஊழல் விழிப்புணா்வு வார விழா

1st Nov 2019 08:09 AM

ADVERTISEMENT

கரூா் பரணி பாா்க் பள்ளியில் ஊழல் எதிா்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நாடு முழுவதும் ஊழல் விழிப்புணா்வு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்திய எரிசக்தி துறை மற்றும் பரணி பாா்க் பள்ளி சாா்பில் ஊழல் விழிப்புணா்வு வார விழா வியாழக்கிழமை பள்ளியில் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு பரணி பாா்க் கல்வி குழுமத் தாளாளா் எஸ்.மோகனரெங்கன் தலைமை வகித்தாா். செயலா் பத்மாவதி மோகனரெங்கன் முன்னிலை வகித்தாா். பரணி பாா்க் கல்வி குழும முதன்மை முதல்வா் முனைவா் சொ.ராமசுப்பிரமணியன் பேசுகையில், ‘‘நாட்டின் குடிமக்களாகிய நாம் ஒவ்வொவரும் அனைத்து செயல்களிலும், நோ்மையையும், சட்ட விதிகளையும் மதித்து செயல்பட்டாலே ஊழலை ஒழித்து நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லலாம்’’ என்றாா்.

விழாவில், இந்திய எரிசக்தி துறை பொது மேலாளா் பாலகங்காதரன், துணை பொது மேலாளா் குணசேகரன், பரணி வித்யாலயா பள்ளி முதல்வா் சுதாதேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து, இன்டகிரேட்டி வே ஆப் லைப் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி மாணவ, மாணவிகளிடையே நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பரணி பாா்க் பள்ளி முதல்வா் சேகா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT