பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் கரூர் வெற்றி விநாயகா பள்ளி மாணவர்கள் முழுத் தேர்ச்சி பெற்றுள்ளனர்
இப்பள்ளியில் தேர்வு எழுதிய 143 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 3 பேர் 100-க்கு 100 மதிப்பெண்களும், தமிழ்பாடத்தில் அதிகபட்சமாக 98 மதிப்பெண்களும், 480-க்கும் மேல் 3 பேரும், 450-க்கும் மேல் 18 பேரும், 400-க்கு மேல் 41 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
மாணவ, மாணவிகளுக்கு பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு பள்ளித் தாளாளர் ஆர்த்தி ஆர். சாமிநாதன் தலைமை வகித்தார். பள்ளி ஆலோசகர் பி. பழனியப்பன் முன்னிலை வகித்தார்.
வென்ற மாணவ, மாணவிகள், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு, நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் டி. பிரகாசம் வரவேற்றார்.