கரூரில் பைக் மீது வேன் மோதி இளைஞர் இறந்தார்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த மாயனூரைச் சேர்ந்தவர் பிரபாகரன் மகன் லோகநாதன்(19). இவர் திங்கள்கிழமை இரவு தனது புதிய பைக்கில் கரூருக்கு வந்துவிட்டு ஈரோடு சாலையில் காயத்திரிநகர் பகுதியில் சென்றபோது எதிரே வந்த வேன் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து கரூர் நகர காவல் நிலையத்தினர் வழக்குப்பதிந்து வேன் ஓட்டுநர் நாமக்கல் மாவட்டம், ராக்கியாம்பாளையத்தைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் வடிவேலை (29) கைது செய்தனர்.