பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் அதிக மதிப்பெண் பெற்ற கரூர் பிஏ வித்யாபவன் பள்ளி மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.
10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் கரூர் பிஏ.வித்யாபவன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 480 மதிப்பெண்களுக்கு மேல் 7 பேரும், 470-மதிப்பெண்களுக்கு மேல் 10 பேரும், 460-க்கு மேல் 22 பேரும், 400-க்கும் மேல் 64 பேரும் பெற்றுள்ளனர். தமிழில் 98 மதிப்பெண்களுக்கு மேல் 7 பேரும், ஆங்கிலத்தில் ஒரு மாணவி 97 மதிப்பெண்ணும், கணிதத்தில் 98 மதிப்பெண்களுக்கு மேல் 7 பேரும், அறிவியலில் 98 மதிப்பெண்களுக்கு மேல் 3 பேரும், சமூக அறிவியலில் 98 மதிப்பெண்களுக்கு மேல் 13 பேரும் , அறிவியல் பாடத்தில் ஒரு மாணவியும், சமூக அறிவியலில் 3 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மாணவர்களையும், இவர்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தலைமை ஆசிரியர், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை பள்ளி தலைவர் பி. அம்மையப்பன், துணைத் தலைவர் பி. கணேசன், செயலர் சுமதிசிவக்குமரன், பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வி.ஏ. பன்னீர்செல்வம், கே. நல்லதம்பி, கே. பாலுசாமி, கேகே. சண்முகம் ஆகியோர் பாராட்டினர்.