பொது இடத்தில் ஆபாச நடனமாடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டிகே. ராஜசேகரனிடம் தமிழ்நாடு திரைப்பட மேடை நடன கலைஞர்கள் நலச்சங்கம் செவ்வாய்க்கிழமை புகார் அளித்துள்ளது.
மனு விவரம்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள வேட்டமங்கலம அடுத்த சேமங்கி என்ற ஊரில் மாரியம்மன் கோயில் தேர் திருவிழா கடந்த 24-ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியைச் சேர்ந்தவரின் தலைமையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி மதுபான விடுதியில் நடனமாடக்கூடிய அழகிகளை வைத்து நடத்தப்பட்டது.
உயர் நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு எதிராக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இது கலாசாரத்தை சீரழிக்கும் செயல். எனவே ஆபாச நடனம் நடத்திய குழுக்கள் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.