அதிக மதிப்பெண் பெற்ற பரணிபார்க் பள்ளி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பரணி பார்க் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பரணி பார்க் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர்.
10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதில் 
 470 மதிப்பெண்களுக்கு மேல் 40 பேரும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 74 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 146 பேரும் பெற்றுள்ளனர். மேலும் அறிவியலில் 4 மாணவர்களும், சமூக அறிவியலில் 3 மாணவர்களும் என மொத்தம் 7 மாணவர்கள் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.  
மாணவர்களுக்கு பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு பரணிபார்க் கல்விக் குழுமத் தாளாளர் எஸ். மோகனரெங்கன் தலைமை வகித்தார். செயலர் பத்மாவதி மோகனரெங்கன் முன்னிலை வகித்தார். மாணவர்களையும், அவர்களின் சாதனைக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் பரணிபார்க் கல்விக்குழும முதன்மை முதல்வர் சொ. ராமசுப்ரமணியன், நிர்வாக அலுவலர் எம். சுரேஷ், பள்ளியின் முதல்வர் கே. சேகர், துணை முதல்வர்கள் எம். முத்துக்குமரன், ஜி. நவீன் குமார், இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com