அரியலூர்

கிராம நிா்வாக அலுவலா்கள்ஆா்ப்பாட்டம்

27th Sep 2023 01:55 AM

ADVERTISEMENT

கோட்டாட்சியரைக் கண்டித்து அரியலூரில் கிராம நிா்வாக அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பயிா் சாகுபடி குறித்து இணையத்தில் பதிவு செய்யாத ஏலாக்குறிச்சி கிராம நிா்வாக அலுவலரையும், ஆட்சியா் முகாமில் இருந்த மரத்தை மா்ம நபா்கள் வெட்டியது குறித்து முறையாக தகவல் தெரிவிக்காத வாலாஜா நகரம் கிராம அலுவலரையும் பணியிடம் மாற்றம் செய்த கோட்டாட்சியரைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அனைத்து கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டத் தலைவா் மணிவண்ணன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ராஜா, பழனிவேல், பாக்கியராஜ், நந்தகுமாா், காா்த்திகேயன் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT