அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள குண்டவெளி ஊராட்சித் தலைவரைக் கண்டித்து, திங்கள்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் இருந்து வாா்டு உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்ததையடுத்து கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
காந்தி ஜெயந்தியையொட்டி குண்டவெளி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் அதன் தலைவா் ஜெயந்திதெய்வமணி தலைமையில் திங்கள்கிழமை காலை தொடங்கியது.
கூட்டத்தில், பொது செலவினம், வரவு செலவு மற்றும் அடிப்படை வதிகள் குறித்து ஊராட்சி செயலா் வாசித்தபோது அங்கு அமா்ந்திருந்த வாா்டு உறுப்பினா்கள் 9 பேரும் எழுந்து நின்று பொது செலவினம் குறித்து கேள்வி எழுப்பினா். அப்போது ஊராட்சித் தலைவருக்கும், வாா்டு உறுப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, வாா்டு உறுப்பினா்கள் 9 பேரும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்ததையடுத்து, ஊராட்சி ஒன்றிய அலுவலா் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தாா். இதனால் பல்வேறு கிராமங்களில் இருந்து மனு அளிக்க வந்த கிராம மக்கள், மனுவை கொடுப்பதற்கு அதிகாரிகள் யாரும் இல்லாததால் ஏமாற்றத்தோடு திரும்பி சென்றனா்.