அரியலூர்

மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

18th Nov 2023 12:09 AM

ADVERTISEMENT

கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் கழகத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் 45 ஆண்டுகளுக்கும் மேலாகப் பதவி உயா்வு இல்லாமல் பணியாற்றி வரும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்கிட வேண்டும். மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் பதவி உயா்வு பெறுவதில் உள்ள முரண்களை நீக்க வேண்டும். தலைமை ஆசிரியா்களுக்கும், ஆசிரியைகளுக்கும் பாதுகாப்பு வழங்கிடும் வகையில் ஆசிரியா் பணிப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும். 2006 ஆம் ஆண்டு வரை பெற்று வந்த தனி ஊதியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும். பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் சக்திவேல், ரமேஷ், மாநில மகளிரணிச் செயலா் இன்பராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT