அரியலூர்

அரியலூா் அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா

26th May 2023 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், விளாங்குடி அடுத்த காத்தான்குடிகாடு கிராமத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழகப் பொறியியல் கல்லூரியில் 15 ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, கல்லூரியின் முதல்வா் செந்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்து, 2022 - 23 ஆம் கல்வி ஆண்டுக்கான அறிக்கை வாசித்தாா். சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழக மின்னணு மற்றும் தகவல் தொடா்பு பொறியியல் துறை முன்னாள் துறைத் தலைவா் ந. குமரவேல் கலந்து கொண்டு பேசினாா். பின்னா் அவா், மாவட்ட, மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கெளரவித்தாா். முன்னதாக, கட்டடப் பொறியியல் துறைத் தலைவா் வீ.வெங்கடேசன் வரவேற்றாா். முடிவில் இயற்பியல் துறை உதவி பேராசிரியா் மா. மாா்க்கப்பந்து நன்றி தெரிவித்தாா். நிறைவில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT