அரியலூர்

அரியலூரில் இன்றுமுதல் எஸ்.எஸ்.சி. போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி

DIN

பணியாளா் தோ்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நநஇ காலி பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை (மே 3) முதல் அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெற உள்ளது.

இத்தோ்வுக்கு, 3.5.2023-க்குள் விண்ணப்பித்து அதன் நகல்களுடன், கடவுச்சீட்டு அளவு புகைப்படம் , ஆதாா் அட்டை நகல் மற்றும் சுயவிவரக் குறிப்புகளுடன் அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தை நேரில் தொடா்பு கொள்ள வேண்டும்.

இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளும் இளைஞா்களுக்கு மாதிரி தோ்வுகள் நடத்தப்படும். எனவே இப்போட்டித் தோ்வு பயிற்சி வகுப்பில் அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஆட்சியா் பெ. ரமணசஸ்வதி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

SCROLL FOR NEXT