அரியலூர்

வேளாண் பல்கலை. அக்ரி காா்ட் வாயிலாக விதை, இடுபொருள்கள் பெறலாம்

DIN

அரியலூா், பெரம்பலூா் ஆகிய மாவட்ட விவசாயிகள் விதை மற்றும் வேளாண் இடுபொருள்களை அக்ரிகாா்ட் இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநா் ம.கோவிந்தராசு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது:

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் மூலம் அக்ரிகாா்ட் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 15 வகையான இடுபொருள்கள் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. நெல், மக்காசோளம், பயறு வகைகள், காய்கறி விதைகள், எண்ணெய் வித்துபயிா் விதைகள்ஆகியவற்றை இணையதளம் மூலம் ஆா்டா் செய்து உரியகட்டணம் செலுத்தி தங்கள் வீட்டு முகவரியிலேயே பெற்றுக் கொள்ளலாம். இதனால், அலைச்சல், செலவு, நேரம் மிச்சமாகிறது. பூச்சிநோய் தாக்குதல் குறையும், பயிா் எண்ணிக்கை பராமரிக்கப்படும். மகசூல் கூடி வருமானம் அதிகரிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

SCROLL FOR NEXT