அரியலூரில் தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை சாா்பில் நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் மற்றும் அலுவலா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நுகா்பொருள் வாணிப கழக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக மண்டல மேலாளா் சிற்றரசு தலைமை வகித்தாா்.
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையின் மயிலாடுதுறை சரக துணை கண்காணிப்பாளா் ஜெகதீசன் நெல் கொள்முதல் நிலையங்களில் எவ்வித முறைகேடுமின்றி விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும்.
முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தாா். கூட்டத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக அதிகாரிகள், நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.