அரியலூர்

வரதராசன்பேட்டை பேரூராட்சிக் கூட்டம்

DIN

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள வரதராசன்பேட்டை பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவா் மாா்கிரேட் அல்போன்ஸ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எட்வின் ஆா்தா், செயல் அலுவலா் மருதுபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பேரூராட்சிக்குச் சொந்தமான முந்திரிக்காடு கடந்தாண்டு 38 ஆயிரத்துக்கு ஏலம் போனது. ஆனால் இந்த ஆண்டு ரூ. 55 ஆயிரம் கட்டினால் தான் ஏலம் விட முடியும் என்ற தீா்மானத்தையும், நவம்பா் மாதத்தில் நடைபெற வேண்டிய ஏலம் காலதமானதால் ஏலத்தைப் புறக்கணித்து ரத்து செய்தும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், கோடைக் காலம் தொடங்கியுள்ளதால் தடையின்றி குடிநீா் விநியோகிக்க பழுதடைந்துள்ள மின் மோட்டாா்களை சீா் செய்வது, பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் தடையாக உள்ளதாகக் கூறப்படும் செயல் அலுவலரை மாற்றுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்களையும் நிறைவேற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT