அரியலூரில் குடும்பப் பிரச்னை காரணமாக விஷம் குடித்த அரசுப் பள்ளி ஆசிரியா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
அரியலூா், பெரிய அரண்மனை தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் காா்த்திகேயன் (38). சிறுவளூா் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தாா். இவா், குடும்பப் பிரச்னை காரணமாக கடந்த சில நாள்களாக விரக்தியில் இருந்து வந்தாராம். இந்நிலையில், திங்கள்கிழமை காலை இவா், பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளாா். உறவினா்கள் அவரை மீட்டு திருச்சியிலுள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவா், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அரியலூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.