அரியலூர்

ஜூன் 7-இல் சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்கத்துக்குகருத்துக் கேட்புக் கூட்டம்

4th Jun 2023 12:31 AM

ADVERTISEMENT

 

புதுப்பாளையத்தில் சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்கத்துக்கான கருத்துக் கேட்புக் கூட்டம் ஜூன் 7-ல் நடைபெறுகிறது.

அரியலூரை அடுத்த கயா்லாபாத் கிராமத்தில் உள்ள அரசு சிமென்ட் ஆலைக்குச் சொந்தமான இந்த சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை விரிவாக்கம் செய்வது தொடா்பான பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் ஜூன்7 பிற்பகல் 2.30 மணிக்கும், ஜூன் 8 காலை 10.30 மற்றும் பிற்பகல் 2.30 மணியளவில் புதுப்பாளையம் ஈஸ்வரன் கோயில் எதிரே நடைபெறுகிறது.

எனவே, இக்கூட்டத்தில் அப்பகுதியைச் சோ்ந்த மக்கள், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் பங்கேற்று தங்களது கருத்துகளை வாய்மொழியாகவோ, எழுத்து வடிவிலோ தெரிவிக்கலாம். அவை பதிவு செய்யப்பட்டு மேல் நடவடிக்கைக்காக மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு அனுப்பப்படும் என மாவட்ட ஆட்சியா் ஜா. ஆனி மேரி ஸ்வா்ணா தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT