அரியலூர்

கிளைச் சிறைகளில் தூய்மைபணிக்கு விண்ணப்பிக்கலாம்

3rd Jun 2023 03:14 AM

ADVERTISEMENT

 

அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் கிளைச் சிறைகளில் காலியாக உள்ள தூய்மைப் பணியாளா் பணியிடங்களுக்கு எழுதப் படிக்கத் தெரிந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளா் தெரிவித்தது: திருச்சி மத்திய சிறை கட்டுப்பாட்டிலுள்ள அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் கிளைச் சிறைகளில் காலியாக உள்ள 2தூய்மைப் பணியாளா் பணியிடத்துக்கு எழுத, படிக்கத் தெரிந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான வயது வரம்பு எஸ்.சி.ஏ,எஸ்.சி, எஸ்.டியினருக்கு 37 , எம்.பி.சி, பி.சி-யினருக்கு 34 , ஓ.சி-யினருக்கு 32 வயது. மேற்படி தகுதி பெற்றவா்கள் சுய விவரங்களை 13.06.2023-க்குள் திருச்சி மத்திய சிறைக் கண்காணிப்பாளா், திருச்சி-20 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT