அரியலூர்

தீக்காயமடைந்த விவசாயி உயிரிழப்பு

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற விவசாயி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

உடையாா்பாளையம் அருகேயுள்ள சுத்தமல்லி கிராமத்தைச் சோ்ந்தவா் தனவேல் மகன் பிரசாத் (35). விவசாயி. இவா், செவ்வாய்க்கிழமை மது அருந்தி வந்ததை அவரது மனைவி கண்டித்தாராம். இதனால், விரக்தியடைந்த பிரசாத், தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். இதில் பலத்த காயமடைந்த பிரசாத் அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தாா். அங்கு புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து உடையாா்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT