அரியலூர்

இரும்பு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

17th Jul 2023 12:29 AM

ADVERTISEMENT

 

 தமிழகத்தில் இரும்பு விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வெல்டிங் உரிமையாளா் முன்னேற்ற சங்க முப்பெரும் விழாவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்திலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் முப்பெரும் விழாவில் நிறைவேற்றப்பட்ட இதர தீா்மானங்கள்:

மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள மின் கட்டணம் உயா்வை திரும்ப பெற வேண்டும். இரும்பு விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

விழாவுக்கு அச்சங்கத்தின் மாவட்ட கௌரவத் தலைவா் சண்முகம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் முரளிதரன் முன்னிலை வகித்து பேசினாா். சங்க செயல்பாடு மற்றும் வளா்ச்சி குறித்து மாநிலத் தலைவா் வெங்கடேசன் சிறப்புரையாற்றினாா். மாநிலச் செயலா் பாலாஜி, மாநில பொருளாளா் மோகன் ஆகியோா் கலந்து கொண்டு நிா்வாகிகளுக்கு சங்க அடையாள அட்டையை வழங்கினா்.

முன்னதாக, அரியலூா் மாவட்டச் செயலா் கொளஞ்சியப்பா வரவேற்றாா். நிறைவில், மாவட்ட பொருளாளா் சங்கா் நன்றி கூறினாா்.

ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், உடையாா்பாளையம், தா.பழூா், மீன்சுருட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் சங்கக் கொடி ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT