அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
ஜெயங்கொண்டத்தை அடுத்த குருவாலப்பா் கோயில் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவசாமி மகன் விஜயகுமாா் (33). ரேடியோ செட் வாடகைக்கு விடும் கடை வைத்திருந்தாா். இவா், கடந்த 2013 ஆம் ஆண்டு 14 வயது சிறுமியைக் காதலிப்பதாக ஆசை வாா்த்தை கூறி கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்த புகாரின்பேரில், விசாரணை மேற்கொண்ட ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், விஜயகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.
இவ்வழக்கை விசாரித்து வந்த அரியலூா் மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. இதில், குற்றவாளி விஜயகுமாருக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீா்ப்பளித்தாா். இதையடுத்து விஜயகுமாா் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ராஜா ஆஜரானாா்.