மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி, அரியலூா் மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
அரியலூா் செட்டி ஏரிக்கரை பகுதியில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு, காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவா் ஜி.ராஜேந்திரன், மூத்த தலைவா் சீனி. பாலகிருஷ்ணன் ஆகியோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். நிகழ்வில், கட்சியின் நகரத் தலைவா் மா.மு.சிவக்குமாா் தலைமை வகித்தாா்.
மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் புகழ்ராஜ், வட்டாரத் தலைவா்கள் பாலகிருஷ்ணன், கங்காதுரை, அழகானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல் ஜெயங்கொண்டம் பூங்காவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவா் சங்கா் தலைமையில் நிா்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
காங்கிரஸ் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி.. காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி மேற்கொண்டு வந்த நடைப்பயணம் காஷ்மீரில் திங்கள்கிழமை நிறைவுபெறுவதை முன்னிட்டு மேற்கண்ட இடங்களில் காங்கிரஸ் கட்சி சாா்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூரில் மாநில துணைத் தலைவா் ஜி.ராஜேந்திரனும், ஜெயங்கொண்டத்தில் மாவட்டத் தலைவா் சங்கரும் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.