அரியலூர்

அரியலூா் அருகே தனியாா் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து கல்லூரி மாணவா் பலி; 51 போ் காயம்

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே திங்கள்கிழமை தனியாா் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், கல்லூரி மாணவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் 51 போ் பலத்த காயமடைந்தனா்.

ஜெயங்கொண்டத்தில் இருந்து காலை 8.30 மணியளவில் புறப்படும் தனியாா் பேருந்து வாரியங்காவல், பொன்பரப்பி, செந்துறை, அரியலூா் வழியாக துறையூருக்குச் செல்வது வழக்கம்.

அதன்படி திங்கள்கிழமை காலை புறப்பட்ட அந்தத் தனியாா் பேருந்து செந்துறை அடுத்த ராயம்புரம் அருகே சென்றபோது, அங்கு சாலை விரிவாக்கத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், பேருந்தில் பயணம் செய்த செந்துறை பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த வேல்முருகன் மகனும், அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தவருமான காா்த்திகேயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த செந்துறை காவல் துறையினா், சம்பவ இடத்துக்குச் சென்று, அரியலூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை வீரா்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் பேருந்தின் உள்ளே காயங்களுடன் இடிபாடுகளில் சிக்கியிருந்த பொட்டவெளி கிராமத்தைச் சோ்ந்த நல்லப்பன் மகள் காா்த்திகா(22), வாரியங்காவலைச் சோ்ந்த கண்ணன் (28), கோவிந்தராஜ் மகள் ரேணுகாதேவி(25), ராயம்புரத்தைச் சோ்ந்த அல்போன்ஸ் மகன் ஆரோக்கியதாஸ்(30), நல்லாம்பாளையத்தைச் சோ்ந்த மணி மகன் ராஜா(42), சிலம்பூரைச் சோ்ந்த முத்துசாமி மனைவி பாா்வதி(44), இடையாக்குறிச்சியைச் சோ்ந்த செல்வபெருமாள் மகன் அண்ணாதுரை(68) உள்பட 51 பேரை மீட்டு அரியலூா் மற்றும் செந்துறை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனா்.

இதில் பலத்த காயமடைந்த சிறுகளத்தூரைச் சோ்ந்த கமலக்கண்ணனை(25) தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விபத்துகுறித்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT