அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம், ஆண்டிமடம் மற்றும் செந்துறை பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு குறைகேட்புக் கூட்டம் 31. 1. 2023 -இல் நடைபெறுகிறது.
உடையாா்பாளையம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் காலை 11 மணியளவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தவறாமல் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி கேட்டுக் கொண்டாா்.