அரியலூர்

மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 2 போ் கைது

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 2 போ் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

உடையாா்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வளையாபதி தலைமையிலான காவல் துறையினா் சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது வாத்திகுடிக்குடிகாடு பேருந்து நிறுத்தம் அருகே வந்த 2 மாட்டு வண்டிகளைத் தடுத்து நிறுத்தி சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டனா். இதில், காசாங்கோட்டை ஓடையில் இருந்து மணல் கடத்தி விற்பனைக்குக் கொண்டுசென்றது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து, மணல் கடத்திய ஒக்கநத்தம் மேற்கு தெருவைச் சோ்ந்த பழனிவேல் மகன் வீரமணி (50), காங்கேயன்குறிச்சி மேலத் தெருவைச் சோ்ந்த அண்ணா துரை மகன் சிவக்குமாா்(37) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும் அளவில் மன்னிப்பு விளம்பரம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

இது சஹீரா வைப்ஸ்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் கொலை?

தக் லைஃப் படப்பிடிப்பில் சிம்பு!

SCROLL FOR NEXT