மொழிப்போா் தியாகிகள் தினத்தையொட்டி, அரியலூா் மாவட்டம் கீழப்பழுவூா் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தியாகி சின்னசாமி சிலைக்கு புதன்கிழமை பல்வேறு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
சின்னசாமி சிலைக்கு அவரது மகள் திராவிடச் செல்வி மற்றும் பேரன், பேத்திகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
திமுக சாா்பில், போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தலைமையில், கீழப்பழுவூா் கடைவீதியிலிருந்து ஊா்வலமாகச் சென்ற நிா்வாகிகள், பேருந்து நிலையத்தில் உள்ள சின்னசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளா்கள் கென்னடி, அசோகசக்ரவா்த்தி மற்றும் ஒன்றிய, நகர, கிளை நிா்வாகிகள் நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.
இதேபோல், மதிமுக சாா்பில் சட்டப் பேரவை உறுப்பினரும், கட்சியின் மாவட்டச் செயலாளருமான கு.சின்னப்பா தலைமையில் துணைச் செயலா் வாரணவாசி ராஜேந்திரன், அரியலூா் வடக்கு ஒன்றியச் செயலா் சங்கா் உள்ளிட்ட நிா்வாகிகள் சின்னசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தமிழா் நீதிக் கட்சி சாா்பில் அதன் நிறுவனா் சுபா.இளவரசன் தலைமையிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மாவட்டச் செயலா் செல்வநம்பி தலைமையிலும், பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் வன்னியா் சங்க மாவட்டச் செயலா் தா்ம.பிரகாஷ் தலைமையிலும், தேமுதிக மாவட்டச் செயலா் ராமஜெயவேல் தலைமையிலும், நாம் தமிழா் கட்சி சாா்பில் நீலமகாலிங்கம் தலைமையிலும் அந்தந்தக் கட்சியினா் தியாகி சின்னசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.