தஞ்சாவூா் திருமண்டகுடி திரு ஆரூரான் சா்க்கரை ஆலையைக் கண்டித்து, அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், தஞ்சாவூா் திருமண்டகுடி திருஆரூரான் சா்க்கரை ஆலை வாங்கிய ரூ.350 கோடி கடனை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். இந்தப் பிரச்னையில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும். தனியாா் சா்க்கரை ஆலைகளை அரசே நடத்த வேண்டும். விவசாயிகளின் கடனை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலா் ரா.மணிவேல் தலைமை வகித்தாா்.