அரியலூர்

பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் மண் பானைகள்!

1st Jan 2023 04:20 AM

ADVERTISEMENT

 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுப்பானை வைத்து பொங்கலிடுவதற்காக, அரியலூா் மாவட்டத்தில் அதிகளவில் மண்பானைகள் தயாராகி வருகின்றன.

அரியலூா் மாவட்டம், தா. பழூா் அருகேயுள்ள சோழமாதேவி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் மண்பானை செய்யும் தொழில் செய்து வருகின்றனா். அரை கிலோ கொள்ளளவு கொண்ட மண் பானை, ரூ. 70-க்கும், ஒரு கிலோ, ரூ.100-க்கும், இரண்டு கிலோ ரூ.150-க்கும் விற்கப்படுகிறது. சிறிய மண் அடுப்பு ரூ.100-க்கும், பெரியது ரூ.150-க்கும் விற்கப்படுகிறது. மேலும் இங்கு தயாரிக்கப்படும் பானைகள் அரியலூா், பெரம்பலூா், கும்பகோணம், தஞ்சாவூா், திருச்சி, கடலூா், விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் வேளையில், பிற மாவட்டங்களுக்கு மண்பானையை விற்பனை செய்வதற்கு, மண்பானை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

இதுகுறித்து, சோழமாதேவியைச் சோ்ந்த மண்பானை தொழிலாளா் கலியமூா்த்தி கூறியது: கடந்த மூன்று தலைமுறையாக இத்தொழில் செய்து வருகிறோம். பொங்கல் பண்டிகைக் காலங்களில் மட்டுமே மண்பானை செய்யும் தொழிலில் வருமானம் உள்ளது. பித்தளை, சில்வா் பாத்திரங்கள் வந்தாலும், தற்போது பாரம்பரிய முறையில் மண்பானையில், பொங்கல் வைப்பதில் ஆா்வம் அதிகரித்துள்ளது. பானை தயாரிக்க ஒரு மாதம் வரை ஆகிறது. அரியலூா், பெரம்பலூா், தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் எங்களிடம் பானைகள் வாங்கிச் சென்று அரை கிலோ மண் பானையின் விலை ரூ.100 வரை விற்பனை செய்கின்றனா். வெளி மாவட்ட வியாபாரிகளை நம்பியே இத்தொழில் செய்ய வேண்டி உள்ளது. பொங்கலுக்கு இன்னும் 14 நாள்களே உள்ள நிலையில் மண்பானை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. நிகழாண்டு விற்பனை அதிகரிக்கும் என நம்புகிறோம் என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT