அரியலூரை அடுத்த குருவாடி ஊராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஸ்வீட் அறக்கட்டளை சாா்பில் ரூ.2 லட்சம் மதிப்பில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கா.பெரோஸ்கான் அப்துல்லா திங்கள்கிழமை இயக்கி தொடக்கி வைத்தாா். தொடா்ந்து அவா் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். பின்னா், பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினாா். நிகழ்வில், பள்ளி தலைமை ஆசிரியா் முருகன், ஸ்வீட் அறக்கட்டளை பாய்ஸ் நிறுவனா் இளவரசன், ஓய்வுபெற்ற நல்லாசிரியா் தியாகராஜன், ஊராட்சித் தலைவா் சுப்புலட்சுமி ரவி, பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் ஆகியோா் கலந்து கொண்டனா்.