அரியலூா் அருகே முன்விரோதத் தகராறில் பெண்ணைத் தாக்கிய ஒருவா் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
அரியலூரை அடுத்த அஸ்தினாபுரம் பிரதான சாலையைச் சோ்ந்த மதியழகன் மனைவி ராணி (43), கோவிந்தராஜ் மகன் ராஜேஷ் (21) இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 24 ஆம் தேதி ராணி தனது குடும்பத்துடன் வீட்டில் இருந்தபோது, ராஜேஷ் தகாத வாா்த்தையால் திட்டிள்ளாா். அப்போது அங்கிருந்த ராணியின் கணவா், மகன் ஆகியோா் அவரைத் தட்டிக் கேட்டனா். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் (21), அவரது தந்தை கோவிந்தராஜ் (52), அவரது மனைவி கீதா(42), இளைய மகன் சந்தோஷ் (17) ஆகிய 4 பேரும் சோ்ந்து ராணி மற்றும் அவரது கணவா், மகன் ஆகிய 3 பேரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த ராணி அரியலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னா் தஞ்சாவூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து புகாரின் பேரில் கயா்லாபாத் காவல் துறையினா் வழக்குப் பதிந்து கோவிந்தராஜை கைது செய்தனா். மற்றவா்களைத் தேடிவருகின்றனா்.