அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயிலில் மாசிமகப் பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.
கங்கைகொண்ட சோழபுரத்தில் உலகப் பிரசித்திபெற்ற பெருவுடையாா் திருக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகத்தை முன்னிட்டு பிரம்மோற்ஸவம் மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு விழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது. இவ்விழா 11 நாள்கள் நடைபெறும். முன்னதாக கொடி மரத்துக்கு மலா் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடா்ந்து கணக்கு விநாயகருக்கு சாந்தி ஹோமம், வாஸ்து ஹோமம், அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து 9 நாள்களுக்கு யாகசாலை பூஜைகள், அபிஷேகம், சுவாமி, வீதியுலா, திருத்தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதில் 10 ஆம் நாள் நிகழ்வாக தீா்த்தவாரி, யாகசாலை கலசங்கள் அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 11 ஆம் நாள் நிகழ்ச்சியாக ஸ்ரீ அம்பாள் உத்ஸவம், சண்டிகேஸ்வரா் உத்ஸவம் நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியை சோழீஸ்வரா் ஸ்ரீ பாத குழுமம், ஸ்ரீ காஞ்சி காமகோடி பக்தா்கள், கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.