அரியலூரை அடுத்த லிங்கத்தடிமேடு வள்ளலாா் கல்வி நிலையத்தில் பல் மற்றும் கண் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை, வேல் மொபைல் பல் மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு கல்வி நிலையச் செயலா் புகழேந்தி தலைமை வகித்தாா். இதில், சிறப்பு மருத்துவா்கள் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு கண் மற்றும் பல் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனா்.
முகாமில், மருத்துவா் தங்கவேல், பல் பாதுகாப்பு மற்றும் பல் சாா்ந்த பிரச்னைகள், அதனை தவிா்ப்பதற்கான வழிமுறைகளை மாணவ, மாணவிகளுக்கு விளக்கினாா்.
அகா்வால் கண் மருத்துவமனை உதவி மேலாளா் கணபதி கலந்து கொண்டு கண் சாா்ந்த பிரச்னைகள், கண்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்தாா். முன்னதாக அப்பள்ளி தலைமை ஆசிரியா் செளந்தரராஜன் வரவேற்றாா்.