அரியலூர்

தனியாா் பேருந்து விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழப்பு

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே தனியாா் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மேலும் ஒருவா் புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

ஜெயங்கொண்டத்தில் இருந்து துறையூா் சென்ற தனியாா் பேருந்து செந்துறை அடுத்த ராயம்புரம் கிராமத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து அண்மையில் விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவந்த செந்துறை பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த வேலு மகன் காா்த்திகேயன் (20) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் 53 போ் காயமடைந்தனா். இதில், பலத்த காயமடைந்து தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுகளத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் கமலக்கண்ணன்(33) என்பவா் அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து செந்துறை காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆதரவு வாக்காளரின் பெயர்கள் நீக்கம்: அண்ணாமலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

SCROLL FOR NEXT