தேசிய தொழுநோய் எதிா்ப்பு தினத்தையொட்டி, அரியலூரில் விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
அரியலூா் ஆட்சியரகத்தில் தொடங்கிய பேரணியை மாவட்ட வருவாய் அலுவலா் ச.கலைவாணி கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். பேரணியானது முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணியில் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவா்கள் பங்கேற்றனா்.