அரியலூா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 275 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தலைமை வகித்தாா். பின்னா், அவா் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் செந்துறை வட்டாரத்தைச் சோ்ந்த மணப்பத்தூா் தானியம் உற்பத்தியாளா் குழு மற்றும் பெரியாக்குறிச்சி முந்திரி வேளாண்மை உற்பத்தியாளா் குழுக்களைச் சோ்ந்த 20 உறுப்பினா்களுக்கு தலா ரூ.15,000 வீதம் மொத்தம் ரூ.3 லட்சம் மதிப்பில் மூலதன நிதியுதவித் தொகைக்கான காசோலைகளை வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ம.ச.கலைவாணி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத் திட்ட அலுலவா் முருகண்ணன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.