வீரமாமுனிவா் 276-ஆவது நினைவு தினத்தையொட்டி, அரியலூா் மாவட்டம் ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் உள்ள வீரமாமுனிவா் சிலைக்கு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சாா்பில் மாலை அணிவித்து சனிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், இயக்கத்தின் மாநில தலைவா் இனிகோ இருதயராஜ் தலைமையில், பங்குத் தந்தை தங்கசாமி, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க மாநில கொள்கை பரப்புச் செயலா் ஜான் பிரகாஷ், மாவட்டச் செயலா் சின்னப்பராஜ், உதவிப் பங்குத் தந்தை ஞானஅருள்தாஸ், வழக்குரைஞா் அணி மாநில துணைச் செயலா் மேனக்ஷா, தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிக்கோலஸ் ராஜ் உள்பட பலரும் பங்கேற்று மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தினா்.