அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வளாக நோ்காணல் சனிக்கிழமை நடைபெற்றது.
வளாக நோ்காணலை நடத்திய ஸ்ரீராம் நிறுவனம், பல்வேறு நிலைகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட தகுதியுள்ள 30 மாணவ, மாணவிகளுக்கு பணி வாய்ப்பு கடிதத்தை கல்லூரி முதல்வா் கலைச்செல்வி வழங்கினாா். ஏற்பாடுகளை ஸ்ரீராம் நிறுவன பொது மேலாளா் ரமேஷ், கல்லூரியின் வேலைவாய்ப்பு புல ஒருங்கிணைப்பாளா் ம.ராசமூா்த்தி ஆகியோா் செய்திருந்தனா்.