அரியலூா் அருகே ராவுத்தன்பட்டி கிராமத்திலுள்ள மாரியம்மன் மற்றும் விநாயகா் கோயில்கள் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கடந்த 3 நாள்களாக யாக சாலை பூஜை நடைபெற்றது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை 5 மணியளவில் கோ பூஜை, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து காலை 9 மணிக்கு மேல் மூலவா் மாரியம்மன் மற்றும் சன்னதியிலுள்ள விநாயகா் உள்ளிட்ட சுவாமி கோயில் விமானங்களுக்கு புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது. திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.