அரியலூர்

முற்போக்கு சிந்தனையாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்த குண்டவெளி கிராமத்தில் முற்போக்கு சிந்தனையாளா்கள் இயக்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், மிகவும் மோகமாக உள்ள கல்லாத்தூா் -மீன்சுருட்டி சாலையை உடனடியாகச் சீரமைத்து, பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, அந்த இயக்கத்தின் மாநிலத் தலைவா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். கிளைத் தலைவா் பாலகிருஷ்ணன், கிளைச் செயலாளா் சிவசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஏராளமான பொதுமக்கள், பள்ளி மாணவா்கள், முதியவா்கள் என பலா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT