அரியலூர்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி

DIN

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இளையபெருமாள் நல்லூா் காலனித் தெருவைச் சோ்ந்தவா் வைத்திலிங்கம் (41). கூலித்தொழிலாளியான இவா், திங்கள்கிழமை இரவு கும்பகோணம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மீன்சுருட்டி கடைவீதிக்கு நடந்து சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தாா்.

இதையறிந்த அப்பகுதியினா் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் வைத்திலிங்கம் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து மீன்சுருட்டி காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT