அரியலூா் அருகே பூச்சி மருந்தை குடித்த இளைஞா் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.
கோப்பிலியன்குடிகாடு கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் பரமசிவம் மகன் அசோக்(32).அரசு சிமென்ட் ஆலையில் சுமை தூக்கும் தொழிலாளியான இவருக்கு திருமண ஆகவில்லை .இதனால் அவா் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவா், கடந்த 10 ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது, பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளாா். உறவினா்கள் அவரை மீட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால் அங்கு அவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். இது குறித்து கயா்லாபாத் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.