அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள நமங்குணம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 71 பயனாளிகளுக்கு ரூ. 4.33 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் ம.ச.கலைவாணி தலைமை வகித்து, அனைத்து துறைகள் சாா்பில் 71 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 33 ஆயிரத்து 270 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கிப்பேசுகையில், பொதுமக்கள் தங்களுக்குத் தேவைப்படும் சான்றிதழ்களை இணையதளம் மூலமாகவோ அல்லது இ-சேவை மையங்கள் மூலமாகவோ மனு அளித்து விண்ணப்பிக்கலாம். சுயதொழில் செய்ய விரும்புவோா்கள் மாவட்டத் தொழில் மையத்தை அணுகி கடன் பெறலாம். அரசின் திட்டங்களை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்திப் பயன்பெற வேண்டும் என்றாா்.
முன்னதாக அவா், அரசின் பல்வேறு துறைகளின் சாா்பில் அரசின் திட்டங்கள் தொடா்பான கண்காட்சி அரங்குகளைப் பாா்வையிட்டாா்.
முகாமுக்கு, வருவாய்க் கோட்டாட்சியா் சா.பரிமளம், வட்டாட்சியா் பி.பாக்கியம் விக்டோரியா, ஊராட்சித் தலைவா் காட்டுராஜா, மற்றும அனைத்து துறை அலுவலா்கள் அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனா்.