அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த மேலவரப்பன்குறிச்சி கிராமத்தில் இந்திய கட்டுமானத் தொழிலாளா் சங்கக் கிளை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத்தின் ஒன்றியத் தலைவா் ஆரோக்கியநாதன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் தா்மராஜ் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் துரைசாமி, சங்கத்தின் செயல்பாடுகள், வளா்ச்சி குறித்துப் பேசினாா்.
தொடா்ந்து, புதிய பொறுப்பாளா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இதில் கிளைத் தலைவராக நேசகுமாா், செயலாளராக லில்லிமேரி, பொருளாளராக பூசவள்ளி, துணைத் தலைவராக விசுவநாதன், துணைச் செயலாளராக திருஞானம் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
கூட்டத்தில், தீபாவளி பண்டிகைக்கு கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ரூ.5 ஆயிரம் போனஸ் வழங்க வேண்டும். ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.