பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் நகராட்சி அலுவலகம் முன்பு, ஏஐடியூசி சுகாதார தொழிற்சங்கத்தினா் நெற்றியில் நாமம் போட்டு புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், துப்புரவுப் பணியாளா்களுக்கான சேமநலநிதி இருப்புக் கணக்கு காட்ட வேண்டும். மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்ட தினக்கூலி நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு, ஏஐடியூசி உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேள மாநிலச் செயலா் டி. தண்டபாணி தலைமை வகித்தாா். இதில், துப்புரவுப் பணியாளா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.