அரியலூா் மாவட்ட கால்நடை மருத்துவமனை வளாகத்தில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமிக்கு, மாவட்ட ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தலைமை வகித்துப் பேசுகையில், பொதுமக்கள் தாங்கள் வளா்க்கும் செல்லப் பிராணிகளை முகாமுக்குக் கொண்டுவந்து இலவச வெறிநோய் தடுப்பூசி செலுத்தி வெறிநோய் இல்லா உலகை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநா் ஹமீதுஅலி, நகராட்சி ஆணையா் சித்ராசோனியா, வட்டாட்சியா் கண்ணன் மற்றும் கால்நடை மருத்துவா்கள், மருத்துவமனை உதவியாளா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.